ஒற்றை மரம்
உதிரும் இலை
கால் நனைக்க நீர்
கையணைக்க நீ...!!!
வெற்றுக்காடு
விட்டில் சத்தம்
சிணுங்கா நினைவு - நீ
சிணுங்கும் நிகழ்வு...!!!
கொட்டும் அருவி - மீன்
கொத்தும் குருவி
மெல்லிய தென்றல் - கவி
சொல்லிடும் "அன்றில்"...
அங்கு
நான் தனிமை படகு - நீ
தவழும் துடுப்பு...!!!😱
No comments:
Post a Comment