என் காதலே
நீ கொடுத்த சில
கோடி
முத்தங்களை
பதுக்கி வைக்க
இதழ்களில்
கூட இடமின்றி
போகிறது!
உயிரக் காதலே
உறைந்திடும்
உன் நினைவுகள்
கூட, இதயம் தாண்டி
என் இட வலம்
எங்கும் தவழ்கிறது!
உன்னோடு உறவாடும்
தருணங்களில்,
என் ஆறறிவிலும்
புன்னகைக்
கொத்துக்கள்
விரிகிறது!
புத்தகத்திலும்,
பூக்களிலும்,
அதனை வண்ணம்,
அவ்வளவும் - உன்
நிழல்களே!
எத்தனை
காலங்கள் வாழ்ந்தாலும்,
என்னோடு வாழ்ந்திடு!
என் பெண்மையும்
கொஞ்சம் உன்னோடு
No comments:
Post a Comment