Thursday, November 22, 2018

இளவேனில்




மழை மேகம்
சிலையாகி
நிற்கும் வரை
குளிர் காற்று
எனை மூடுது
மனதோடு உறவாடுது

மழைத் தூறல்
மண்ணைத் தளுவ
அது ஏனோ
உடை மாற்றுது,
நடை போடுது

ஜன்னல்
ஓரக்கன்னிப்
பூவின் விழிகளில்,
மின்னல் வந்து
விளையாடுது
மிரண்டும் மனம்
பகல் காணுது

இன்னும்
ஏனோ காற்று
அது உடை மாற்றுது,
தென்றலாக உருவானது

கன்னியவள்
விரல் இடுக்கில் 
வெள்ளித் தூறல்
கதை பேசுகையில்'
தென்றலுக்கு 
குளிர் எடுத்ததால்
குறுகி அடங்கி வான் 
மழைக்கு வழி விட்டதோ!

இன்னும் இவள் கண்ணில் விளையாடும் 
மின்னலுக்கு 
என்ன மயக்கம்" 
நின்று கதை பேசுது!
கொஞ்சி உறவாடுது!

கன்னியோடு 
மயக்கம் கொண்ட 
மழைக்கு ஏனோ 
பூமி மீது மோகம்
தனக்குள்ளோ 
மூழ்கடிக்குது!
தனிமையில் தத்தளிக்குது

ஓஹ்.......
அவள் விழிகளில் 
விழுந்ததால்
மயங்கியதோ?
மசங்கியதோ?

மழையது!
       
         ஸ்னேகமுடன்
                       ஷியா.

No comments:

Post a Comment