Sunday, November 25, 2018

அழுதிடுமே மழையது

நீந்தாத நீர்க்குளமும்
ஏர் ஏந்தாத ஏரியதும்
எங்கும் காணவில்லை....

பார் செய்தாரோ
பாலை வனம்,
நீர் தீர்த்தாரோ மானுடமும்,

நான் குளித்த ஏரிக்கும்
நா வரழ்கிறது
நீர் அருந்த......

இடி தொலைத்து
முகில் தொலைத்து
மழை மருத்து
வெயில் கொளுத்த ......
வெட்டி விட்ட மரமதும்
பட்டொளியுது பார்.....

மழை விட்ட சொட்டோ ?
மழை கண்ணீர் விட்ட சொட்டோ...?
குழாய்க்குள் குறு குறுக்க
உதடு நனைத்தேனும்
உயிர் வாழ வந்ததிந்த
வயலான்......

இன்று இது போதும்,
நாளையும் அந்த மழை கொஞ்சம் அழுதிடுமா .......?
நாவரண்டு நான் வரும்போது
என் உதடேனும் கொஞ்சம்
நனைத்துச்செல்ல.......

No comments:

Post a Comment