Sunday, November 25, 2018

குருதித் துவள்

நித்தம் நித்தம்
வெடிக்குதடா
வெடி குண்டு, 
அந்த பாவியரை 
நாம்
அழிக்க வேண்டும்,
அணி திரண்டு!

ரத்தத்தில் 
சிதையுதடா
அரும் மொட்டு, 
அதைக்கண்டு 
பித்தமாய்க்
கலங்குதடா 
தமிழ் வட்டம்!

இத்தனைக்கும் 
என்ன செய்தோம் 
எம் மக்கள், 
ஏகனே ஏங்குகிறோம் 
கெதியற்று!

குதித்துச் சிதறும்
 ரத்தத்தை வேடிக்கை
பார்க்கும் ஐ நா வே,
ஒரு
நாள் உம்மீது
 வெடிக்காதா
 வெடி குண்டு, 
விழித்திடும் விடியல் 
எமக்குமாய்!

கோப்பியிலும், 
பேரித்தங் கனியிலும்,
ஊறிய படி வேடிக்கை
 பார்க்கும் அரபு தேசமே"
ஏகனும் உம்மை
வேடிக்கை பார்க்கும் 
நாள் உண்டு மறவாது, 
மண்ணறைக்கு 
அஞ்சியேனும் குரல்
 கொடுங்கள்!

மடிந்தொழியும் 
மழலையரே, 
ஏங்குகிறோம். 
உம்மை
ஏந்தும் பாக்கியம் 
இழந்தவர்களாய், 
உமக்காய் கை 
ஏந்துகிறோம் நாயனிடம்!

ஏய்........
எகூகுதிகளே!

வேண்டுதலை 
வென்றிடாது 
உங்கள் பீரங்கிக் 
கணைகள்,
ரத்தத்தில் நீராடும் 
ராட்சசர்களே, 
பித்தம் கலங்கி
 பிடரியில் பின்னங்கால் 
அடிக்க ஓடும் நாள் உண்டு, 
எத்தி வைத்துள்ளான் 
வல்ல நாயகன் மறவாதீர்!

இப்படித்தான் 
குதித்தனர் 
இஸ்ரவேலர்,
எப்படி வந்தது 
தீச்சுவாலை??
மறந்துட்டீரா?
உம் மறதிக்கும் 
மறதி தரும் நாள் 
உண்டு மறவாதீர்!

இரங்கல் கொண்டு 
இதயம் பதற
 உதவ வழியின்றி
 துடிக்கின்றோம், 
தவிக்கின்றோம், 
காரணம் நாங்களும்
 சட்டம் என்னும்,
சிலந்தியில்
சிறையுண்டு வாழ்கிறோம்,
சிரிய 
நெஞ்சங்களே எம்மை
மன்னியுங்கள்!
  
ஏகனே கதி என்று கதறியழைக்கின்றோம்,
உறவுகளே,உதவி வரும்
அஞ்சாதீர். தக்பீர் முழக்கம் தழைத்தோங்கும்,
அஞ்சாதீர்!

வரலாற்றைப் புரட்டிப் பாரும், மடயர்களே.
இழப்பு மட்டுமே எமக்கு
தோல்விகள் அல்ல.
சென்றவர்கள்
வென்று விடுவர்
சொர்க்கமதை
ஒன்றுக்குமாகா
உலகின் மேல்
 ஏன் உனக்காசை!

எம்மக்களை
 மண்ணறைக்கே 
உன்னால் அனுப்ப முடியும்,
 மண்டியிட வைக்க முடியாது,
வென்ற குலம்
இது இன்னும் வெல்லக்
 காத்திருக்கும் குலம்!

ஐ நா வுக்குள்
 அடங்கிக் கிடக்கும்
அறிவு முடங்கிப் பேடையரே,
வெளியேறுங்கள்
எங்கள் சேலைகளை
 அணிவிக்கிறோம் உமக்கு!

அறிந்து கொள்ளுங்கள்,
அனியாயக்காரர்களே 
இது எமக்கான
 சோதனையே தவிர
உமக்கான சாதனையல்ல.
கண்டு கொள்வாய்,
நின்று கேள் மனிதா 
வென்று விடும் மனிதம்
உன்னை!

No comments:

Post a Comment