Monday, November 26, 2018

கானலில் காதல் செய்தேன்

கானலின் சாரலில்
சரிந்தவள் நான்,
காதலைத் - தீ
என என்னி
நீரினில் புதைந்தவள்
நான்!

ஏதென அறியாமல்
எதனிலும் ஒட்டாமல்
திரவமாய் மிதந்தவள்
நான் - இன்று
உன் குரல் கேளாமல்
உன் முகம் பாராமல்
உயிர் வாழ்வது
சிரமம் என
துடிப்பவள் நான்!

எங்கிருந்தாய்
இத்தனை நாட்கள்
ஏன் மறைந்தாய்
என் விழி நின்றும்!

பித்தனையே
மிஞ்சி விட்டேன்,
உன்னை மொத்தமாய்
வடிப்பதற்கு - நீ
கார்காலக் குளிர்
மேகம், அதனால் தான்
நான் உன்னில் மலர்கிறேன்!

No comments:

Post a Comment