Thursday, November 29, 2018

ஒரு அரபுக்கண்ணீர்




இளநரை 
மறைத்தாய், 
இளமையை
 தொலைத்தாய்!

குடும்பம் 
எனும் பாரம் 
சுமந்தாய், 
தாயும் ஆனாய், 
தந்தையும் ஆனாய்!

கண்ணீரில் 
குளித்தாய், 
கனவுகளை 
தொலைத்தாய்!

பட்டினி கிடந்தாய், 
பசியை மறந்தாய், 
மறைத்தாய்!

கனவுகளை
 மூட்டை கட்டி 
துவைக்காமல் 
காத்து கிடந்தாய்!

நீ அல்லவா தாய்!

குளிரில் 
உறைந்தாய் 
வெயிலில்
 காய்ந்தாய் 
தேய்ந்தாய்!

தலைவலி 
கண்டாய்,  
தவித்தாய், 
தடுமாறினாய்,
 தலையனையை 
நினைத்தாய்!

வலி மறந்தாய்,
வாய் சொல்லில் 
காயம் ஆனாய்,
உடைந்தாய்
 நொறுங்கினாய்
போதும் தாயே - நீ 
இத்தனையும் 
செய்து எதை 
கண்டாய்!

No comments:

Post a Comment