என்னைத் தூற்றிக்
கொண்டு நீ ......
தூசியில்
புதைகிறாய்!
நாளுக்கொன்றும்
நிமிடத்துக்கொன்றுமாய்
உன் தேடல்கள் மாறலாம்,
தேவைகள் தீரலாம்!
எல்லையின் முடிவில்
எங்கும் தேடிப்பார்
இல்லை என்ற
விடையே உன்னை ஏமாற்றும்!
ஔித்ததும், மறைத்ததும்,
மறுத்ததும், மர்மமாய்ப் போகும்.
மறந்தவை நினைவு கூரும்.
மறுகணம் அவைகளும்,
உனக்கில்லை என்றாகும்.
அன்று தோற்பது நேசமல்ல நீயாவாய்.
No comments:
Post a Comment