Sunday, December 30, 2018

நவீன நங்கையே

காமம் என்னும்
திரையை காதல்
கிழிக்க ....
கருவறை தேடி உயிர்
அணு போக !

சில நிமிட சிற்றின்பம்
சிசு அதைத் தோற்ற
கசடுகள் மாற்றவென்று
கருக்கலைப்பு, உயிர்
பறிப்பும் கயவர் அரங்கேற்ற!

கோடியில்  ஒருத்தி
குலத்தில் ஒருத்தி
மலடாய்த் துடிக்க
கல் நெஞ்சர் கொல்கின்ற
செயலில் வெல்கின்றதென்னவோ!

ஒருக்காலும் மகப்பேறு
இல்லை என்று
ஊரொங்கும் தூற்ற
ஒழுங்கை வழி ஒழிந்து
 ஒதிங்கிச் செல்லும்
சில மனம்.....!

கால்க் கட்டு இல்லாமல்
கவனிப்பார் இல்லாமல்
தெருவோர சந்துகளில்
காம சீழ்களை வழியவிட்டு
கற்பையும் தாரை வார்த்து
கருவையும் உருவாக்கி
நாய்களின் பசிக்கு
சிசுக்களைப் படையல்
வைக்கும் சில மனம்!

காதலாம்.....
இணயத்தில் முகவரி
தொடுத்து
இதயத்தில் ரசனைகள்
வடித்து, குருந்தகவலில்
வாழ்வை வகுத்து,
அழைப்புகளில்
அங்கம் காட்டி, தவிப்புகளை
அதிகம் ஏற்றி குலம் மறந்து
குடும்பம் மறந்து,
பாசம் மறந்து, கடைசியில்
தன்னை மறந்து
கற்பை இழந்து
உயிரையும் கொல்லும்
இதற்கு பெயர் காதலாம்!

காதலில் சுயம் மறந்து
பெற்றவள் உயிர் பறித்து
உறவினை உலையிட்டு
ஊரானை உயர்தி
உரம் ஏற்றி உன்னையே
நீ அழிப்பதுதான்
காதலா!

நாகரீக நங்கையே
உன் ஆடையில்
ஆங்காங்கே அங்கம்
தெரிவது போல்
உன் செயலிலே
அவப்போது சுய நலம்
தெரிவது போல்
சிசுவையும் நினைத்து
விட்டாயா!?



பாசத்தால் விழைந்த
நீ....
 மோகத்தில் மூழ்கி
காமத்தில்
 கொலையாளியாகிறாயே
கொடூர மனம்
கொண்ட பெண்ணே
நீதியாளன் பாராமல்
இல்லை நிறுத்து உன்
செயலை!

உருவெடுக்கிறோம்
என்று கூடத் தெரியாமல்
உலகையும் அறியாமல்
வலியை மட்டும் கொடுக்கிறாயே
இதற்கு நீ மகவற்ற
மலடியாய் உருவெடுத்திருக்கலாம்!

பிளைத் தாகத்தில்
பிரழயம் செய்யும் மனங்களை
ஒருகனம் சிந்தனை
செய் இனியேனும்
வருந்தி நடவாதிடினும்
திருந்தி நட நவீன நங்கையே!

Monday, December 24, 2018

கண்கள்

இன்பம் துன்பம்,
இவை இரண்டையும்,
 எப்போதும் கண்கள்
அறிவதில்லை.
 அதில் எது
அதிகரித்தாலும்,
 கண்கள் கண்ணீரை
மட்டுமே.
 வெளிப்படுத்தும்
 கண்களுக்கு
 சிரிக்கவும் தெரியும்.



Thursday, December 20, 2018

சீற்றம் காட்டவா கிழைகளைச் சுருட்டவா



 மூன்றாம் உலகத்தில்
இருந்து முளைக்கிறது
என் உறவுகளுக்கான
உயிர்!

அவள்....
முன்னே கிடக்கையில்
சானையின் ஈரம்
காயும் முன்பே சனியனே என்று எடுத்தெறிந்தவள்
என் தாய்!


வேண்டாப் பிள்ளை
என்றால் வெறி நாய்கள்
கூட ஈன்றொடுக்காது போல!

கற்பனைக்கும் எட்டாத
கருவறையில்
விற்பனைக்கு என்று
விழைந்தவள் நான்,
தொப்புளிலே தொங்க வைத்தவளுக்கு தோழ்கழிலே தங்க வைக்க இரக்கமில்லை!


கற்பனியாய் நீ இருந்து
கடு கடுத்ததை கற்பத்திலே கேட்டிருந்தேன் கலைந்திடத்தான் தெரியவில்லை ......
தெரிந்திருந்தால் கருவோடு கலைந்திருப்பேன்
தெருவோடு கிடவாது!

உன் சேலையில பட்ட
கரை செடி என்று கழுவி
விட்டது போல்
உன் மடியிலே விழைந்த
என்ன மண்ணோடு புதைச்சிருந்தா
உரமாகிப் போயிருப்பன்
மரமாச்சும் செழிச்சிருக்கும்!


அணல் வீசும் மூச்சோட
தணல் வார்த்தை சூல் ஆட தனியாத்தான்
தள்ளி விட்ட ......
விறகுக்கட்ட விலை பேசி விற்பது போல்
என நீயும் வித்துப்புட்ட!

புரிதல் கொண்ட வயதினிலே தெரிந்து கொண்ட முதல் வார்த்தை தத்துப் பிள்ளை.......
விரிசல் தந்த ஊரு சனம் பெரிசா ஒன்று
சொல்லயில்ல......!


கருசலுல போட்ட விதை
காலத்துக்கும் விருட்சம்
தராதாமே......
உன் கருவறையில் இருண்ட என் உலகம்
கடைசி வர வரண்டதென்ன!

உருண்டு பிரண்டு
எழுந்து நிற்க உலகம்
கொஞ்சம் எனக்காய்ச் சிரிக்க நான் இழந்த கண்ணீர் இமையத்தை புதைக்குமடி!

திசைகளைத் தேடி
விசைகளைப் பூட்டுகின்றேன்
முகவரி எனக்கெழுத
முழுமையாய்
இழந்து நின்றேன்
இழமையின் சுகங்களை!


எனக்கு மட்டும் ரணங்களால் இதயம்
அதை புன்னகையால்
மூடுகின்றைன்!

அழுகை
என்னும் வாசகத்தை அமர்விடமாய் கொண்ட
நான் அரபு தேச வீதியிலே முகவரியைத்
தேடுகையில்......
சிரிப்புக்கு  சிறகு முழைத்தது!

என் உறவுகளுக்கோ
மூன்றாம் உலகில் இருந்து உயிர் கிடைத்தது!


அழைப்பு மணிகள்
ஆயிரம், ஆயிரம்,
நிழல் கூடக்
கண்டதில்லை
அக்காளாம், அம்மையின் உடன் பிறப்பாம்.....
அப்பனுக்கு ஆயிரம் அண்ணன்களாம்
அப்பப்பா........!


சாணையில பட்ட ஈரம்
சருகாகிப் போவதற்குள்
வீதியில விட்டெறிஞ்ச
தாய் வளிப் பாசம் எல்லாம்
விருட்சமாய் நான் எழவே வெட்கமின்றி
நிழலுக்கு ஒதுங்குதப்பா!

குருத்துலையே
கருத்து இல்ல....
குடி வளிக்கும் தேவையில்ல.....
விருட்சமாய் வந்த பின்பு
நிழல் எதற்கு!

நான் என்ன சொய்ய....???
என் கிழைகளை சுருட்டிக் கொள்ளவா
இல்லை காற்றோடு சுழன்று சீற்றம் காட்டவா!

என் மதிக்கு நின்மதியில் பங்கு இல்லை!


Wednesday, December 19, 2018

காத்துக் கெடக்கன் புள்ள



பச்சை மரச் சோலைக்குள்ளே
மெத்தைப் புளுக் கூட்டம்
போல் நெஞ்சரிக்க
நினைவு தந்து போறவளே.....!


கஞ்சுப்பானை நீ
சுமந்து போக....
ஆத்தருகே அறுகறுக்க
நான் கெடக்க
காத்து வந்து கூத்தாடி
அறுகைச் சாய்க்க
முத்தழகி உண்னோட
வண்ணம் கண்டு
அருவாவோ கை அறுக்க!


செந்தாமரை முகத்தோட
குருத்து மணல்
குவியல் போல குந்தி இருக்கும் முகப்பருக்குள்
நோகாம நான் தடவ
நேராதோ நேரமது!


பட்டணத்தில் படிச்ச புள்ள பகட்டேதும்
உணக்கு இல்லை
பாமரந்தான் நான் புள்ள
பாராமல் போவியோ!


ஏட்டுல எழுதாமல்
இலக்கணம் வகுக்காமல் வாழ்க்கைக்கு வேண்டியத நாத்து நடும்
பெண்கள் சொல்ல
வாய்க்கா வளி வந்து ஏறிக்கிச்சு புத்தியில!

அய்த்த மக படிச்ச புள்ள
ஆனாலும் மாமனுக்கும்
மனக்கணக்கு கொள்ளை!


கஞ்சுப்பானை ஆறும் முன்னே கருவிழிய
நோக்கு புள்ள
கருவாயன் நான் காத்து
கிடக்கனுல்ல......
நெஞ்ச நெகிழ வச்ச
பஞ்சு விரல் பிடிக்க
பரிசம் போட நான்
வரட்டா!


அந்தி சாயும் முன்னே
அவசரமா போறவளே
பிஞ்சு மனசு ஒண்ணு
கெஞ்சிக் கெடக்குதம்மா
காஞ்ச சருகப் போல
கணக்கெடுக்காமல்
போறதென்ன!


நெட்டை விரல்கள்
தொட்ட களி மண்ணும்
நேசம் புரியுதடி ஒம்மேல
கருவாயன் காதலுக்கு
வருவாயோ தேரிழுக்க
ஆத்தருகே பூத்த அறுகுக்ள்ள கொட்டி விட்டு போறம்புள்ள
ஓ.... நெனப்ப.....
காத்து வந்து ஓங் காதில் சொன்னா
நேத்திருந்த இடத்துல காத்திருப்பன்
வா புள்ள கை புடிக்க!

Saturday, December 15, 2018

நீ அல்லவா தாய்




பூக்களின் நிழலுக்குள்
ஒழிந்து கொள்ளும்
வண்டு போல்!

என் முந்தானைத்
திரைக்குள்ளே
முகம் புதைக்கும்
அரும்பே!

கருத்தரித்ததும்,
கத்தரிப் பிஞ்சு
வெறுத்தது,
பப்பாளி ஆகாது,
பசரிக்கு குளிர் கூடும்,
தக்காளி தின்றாலோ,
தங்க மகவுக்கு உடல்
கரையும்!

மீனுக்கு தரம் பிரிச்சு
ஆடைக்கு அகலம்
வச்சு.......
கூடவே காவல் வச்சு
பத்து மாதமும்
பல்லாயிரம்
நிமிடங்களையும் கடந்து!

இடுப்பு வலிக்க,
நடை தளர....
இதயம் சற்று அதிகமாய்த்
துடிக்க!
இத்தனையும் அவள்
கடக்க!

தான் பெறக் காத்திருக்கும்
மழலைக்கு பெயர்
வகுத்து, பொருள்
தெரித்து.......
கண்ணாலும்,
மனதாலும், உருவமைத்து!

மல்லார்ந்து படுக்க
மூச்சுமுட்டும்,
குப்பறப் படுத்தா கொஞ்சம் சுகமும்
கிட்டுமா என்று!

பானைக்குள்
ஊற்றிய நீருக்கு
தீயிட ......
பானையிலும்
நில்லாது நீரிலும் அடங்காது உலையில்
கொதித்தெழுந்து
உடையும் நீர்க் குமிழ் போல் அவள் துடிக்க!

அன்னா எட்டிப் பார்க்கும்
பிரசவம் என்று தன்னைத்தேற்றிக்
காலம் தள்ள!

தீயில பட்ட வைக்கோல்
சாம்பலாகி ஊருரிலே மிச்சம் இன்றி
உறைவதுபோல்.....
அவள் மூச்சு கடு கடுக்க!

இத்தனையும் கடந்து,
ஒருசில மணி நேரங்கள்
தன் தசை இறுக.....
தலை விறைக்க.....
மூச்சுக்குள்
அணல் வீச.....
அடி வயிறு விரு விருக்க
அந்தரம்தான் அவளுக்கு!

ஆண்டவனை அருகிருந்தால்,
ஏன்ற வரை குதறியிருப்பாள்,
ஈன்ற சுகம் அறிந்ததுண்டா.....
ஈடு இல்லை எதுவும்!

உலகம் எதிரியாகும்,
கணவன் எதிர்க் கட்சிக்காரன் போல்
தோன்றும்.....
விசமிருந்தால் விடுதலை பெறலாம்
என்று கூறும் மனம்!

தாதியோ, அங்கும் இங்கும் நடவென்பாள்....
கால்களோ உணர்சியை
சிலுவையில் ஏற்றி விட்டு இறந்து கிடக்கும்!

அடி வயிறு மட்டும்
போர் தொடுக்கும்,
கண்ணீருக்கே
கண்ணீர் வரும்.....
உன் பெண்மை
உயிர் விளிம்பை
விட்டு விடுவதா.....
பற்றிப் பிடிப்பதா ....
என்று அல்லோலப்படும்!

உலகமே விடியலில்
வியாபித்திருக்கும்
ஆனால் உனக்கு மட்டும்,
அந்த ஒரு சில
மணி நேரங்கள்
விழிகளால் இருண்டு கிடக்கும்!


பெறுவதா அடி
வயிற்றைக் கிழித்து
எடுப்பதா என்ற தர்க்கம்
வரும்!

தாயோட சேயும்
நோயின்றி வந்தால்
போதும் வாயால் இழுத்தெடுங்கள்.....
வயிற்றையேனும்
கழித்து எடுங்கள்
பேதை துயர் பொறுக்குதில்லை
என்று உறவுகள் மன்றாடும்.......
இறையாளனை கூவி
அழைக்கும்!

எது நடந்தாலும்
எவர் துடித்தாலும்
சுமை இறக்க நீ மட்டுமே
துடிப்பாய்!

சாவை வாவென்று
அழைப்பாய்.....
இத்தனையும் கடந்து
ஈன்றெடுத்த மகவை
மயக்கத்தில் உறங்கிக் கிடக்கும் நினைவுக்குள்
ஓரமாய் நினைத்துப்
பார்ப்பாய் .......

நீ......

அல்லவா தாய்!

Friday, December 14, 2018

கண்களால் களவு போகிறது கற்பு.

பூக்களை
 பத்திரப்படுத்து
உன் பூவுக்குள்
ஈக்களை மேய
விடாதே!

வாழ்க்கையை
அழகாக்கு
வைத்தளத்தில்
ஏலம் விடாதே
பெண்ணே!


Tuesday, December 11, 2018

நட்பில் ஒரு துரோகம்




தோழமை என்பது
தோழிலும் உயரியது
என்பார்கள்.....

இங்கனம் பார்.......
உடும்பாய் ஒட்டிக்கொண்டு
அட்டை போல்
எமை உறுஞ்சும்
முக மூடிகள் கோடி......

அட்டைக்கோ தேவை
குருதி சில நட்புக்கோ
தேவை பணம்......

வேண்டும் என்றால்
துயில் உரியவும்
அஞ்சார்.....
வேண்டாம் என்றால்
உயிர் உறுஞ்சவும்
அஞ்சார்......

நவீன நட்பின்
ராச்சசம்
சுயநலங்கள்
வெளிப்படும் போதே
உணர முடிகிறது

Sunday, December 9, 2018

ஒரு விதவையின் ஏக்கம்



இணக்கம்தான்
இதயம் முழுவதும்
கொஞ்சம் பயத்தோடு!

உன்னை அள்ளிக்
கொள்ள ஆசைதான்
ஆனால் என் மடியிலோ
வேறு கனம் இருக்கிறது!

தயக்கமே இப்போது
தள்ளி நில் என்கிறது!

நான் அணிந்து
கொண்ட
அரிதாரமே
என்னை விலகி
நில் என்கிறது!

மாலை கட்ட
வாழையில்
தோலுரி,
காயங்களில்
தீப்பற்ற  வைத்து
விடாதே!


வாடிய பூக்களுக்கு
ஜனனம் கொடுக்க
நினைக்காதே
அவை அப்படியே
இருக்கட்டும்
விட்டு விடு!

தேவைதான் - ஆனால்
தேவையற்ற
வார்தைகள் சூழ்ந்து
சுட்டு விடுமோ என்ற
அச்சமே ஆக்கிரமிப்பின்
உச்சியில்!

வாடிய மலர்களை
அப்படியே விட்டு விடு
அவை அப்படியே
இருக்கட்டும்.
மாறாக தீயில் வீசாதே!

ஜடங்களைக் கண்டு
பரிதாபம் கொள்ளாதே,
அது தேவையில்லை.
முடிந்தால் நிழல் கொடு
முட்டி உரசி பிச்சு எறியாதே!

Tuesday, December 4, 2018

விதி செய்தவன் யாரோ



சாய்தலில்,
சோர்வு இல்லை!

சாமர,
அழகோ கொள்ளை!

பார்வையில்,
அழகைத் தின்னு!

கண்கள்,
மேய்தலில் அதனை
உறுஞ்சு!

காதலில்,
போர் தொடுத்தே,
காமத் திரை கிழித்து
கற்பழிக்கும், சூரியனை,
அடக்கு!

புஷ்பங்கள், புழுதியில்
குளியாது திரையிட
முயற்சித்துப் பார்!

உனக்குள் மட்டும்,
சுவாசிக்க வைக்க
வழி தேடு!

அருவிக்கோ அடி
நனைக்கும்
 அனுமதியை,
ரத்துச் செய்!

பனித்துளி பாய்
விரிக்காது பார்துக்
கொள்ள உன்னால்
முடியுமா!

ஏலச் சந்தையில்,
பேரம் போகாது
பூக்களுக்கு
பெறுமதி சேர்க்க - நீ
தயாரா!

பூக்களுக்கு,
இத்தனை
வினாக்கள்
என்றால்,
பூ மகளுக்கு,
மட்டும் ஏன்
சதா......
வாழ்க்கைப்
போராட்டம்!

கருவில் உதிர்த்த,
காலம் தொட்டு.
புழுதியில் புதையும்
காலம் வரை
கனவுகள் தொலைத்தோம்!

நாருடன் மணத்திடும்
பூவுக்கும், பாருடன்
கமழ்ந்திடும், பெண்ணுக்கும்,
காற்றுடன் கதை
பேசியே.....
புழுதியில் புதைய
விதி செய்தவன்
யாரோ!

Monday, December 3, 2018

யாரடா நீ......




காற்றில் மிதந்து
வந்த சருகைப் 
போல் 
எங்கிருந்து
வந்தாய்,

காரணம் இன்றி
தொடரும் 
உரையாடலை
என் மீது தொடுத்தாய்!

கணப் பொழுதிலா 
காலங்கள் தாண்டியா 
இந்த பந்தம்!

கனமற்ற வளியில்
சுமையற்ற பயணி
நான், இணைந்து
பயணிக்கப் போகிறாயா.....
இடை வெளியில்
காணாமல்
போகப் போகிறாயா!

இடர்ந்து நடக்கிறேன்
இனிய பொழுதுகளைத் 
தேடி.........

Saturday, December 1, 2018

எழுந்து வா



ஆரம்பங்கள் போல்,
 முடிவுகள்
 இருந்துவிட்டால்
 சுவரசியங்களை
 எங்கே பதுக்கி
 வைப்பது.......
 காற்றில் போராடும்
 மூங்கில் காற்றிடம்
 ஜெய்ப்பது போல்
வாழ்க்கையை
ஜெய்த்திடப் பழகு!

இழப்புகளை
 சிரித்த படி
வரவேற்கக்
 கற்றுக்கொள்ள!

அழுகைகளில்
அழுக்கை குழிப்பாட்டு!

விரக்தி வந்தால்
வெற்றியின் விளிம்பை
நெற்றிப் பொட்டில்
வைத்து விரக்தியைத்
துரத்து!

அவதூறுகளை
அம்பாக்கி
 இடையூறுகளின்
மேல் எய்து வீழ்த்து!

பசியாத வயிறும்,
வலியாத உடலும்,
அழாத விழியும்,
வீழாமல் ஒடும்
நீயும், இன்பத்தைக்
காணலாம்........
வாழ்க்கையின்
பெறுமதியைக்
காண முடியாது!

விழு, அழு,
வலிகளை வாங்கு,
புன்னகைக்கு மட்டும்
துரோகம் செய்யாது
இதழ் விரித்திடு......!

நீ புன்கைக்க மறந்தால்!

தோல்வி தலையில்
அமரும், ஏழனம்,
சிறையில் அமர்த்தும்!

உன்னை நீ மறப்பாய்,
உன்னையே தொலைப்பாய்,
உன்னையே உனக்குத்
தெரியாமல் கூடப்
போகலாம்,
பின்பு ஏதடா வாழ்க்கை......

சினத்தை சிரசில்
இருந்து வீசு,
பொறுமையை
உடல் முழுவதும்
பூசு, சோகத்தை
ஒதுக்கி ஓரமாக அமர
விடு , இதயத்தால் சிரிக்கப்
பழகு, முகத்தை
விறைக்க  விடாது
மலர விடு ,
மறு கனம் பாரடா
எதிரியும் உனக்கு
அஞ்சுவான்!

துவழ்து புதையாதே,
விழும் போதே எழுந்திட
சிந்தித்துக் கொள்
எழுந்து வா........
ஏற்றம் உண்டு
வாழ்வில்!
           

Thursday, November 29, 2018

ஒரு அரபுக்கண்ணீர்




இளநரை 
மறைத்தாய், 
இளமையை
 தொலைத்தாய்!

குடும்பம் 
எனும் பாரம் 
சுமந்தாய், 
தாயும் ஆனாய், 
தந்தையும் ஆனாய்!

கண்ணீரில் 
குளித்தாய், 
கனவுகளை 
தொலைத்தாய்!

பட்டினி கிடந்தாய், 
பசியை மறந்தாய், 
மறைத்தாய்!

கனவுகளை
 மூட்டை கட்டி 
துவைக்காமல் 
காத்து கிடந்தாய்!

நீ அல்லவா தாய்!

குளிரில் 
உறைந்தாய் 
வெயிலில்
 காய்ந்தாய் 
தேய்ந்தாய்!

தலைவலி 
கண்டாய்,  
தவித்தாய், 
தடுமாறினாய்,
 தலையனையை 
நினைத்தாய்!

வலி மறந்தாய்,
வாய் சொல்லில் 
காயம் ஆனாய்,
உடைந்தாய்
 நொறுங்கினாய்
போதும் தாயே - நீ 
இத்தனையும் 
செய்து எதை 
கண்டாய்!

Tuesday, November 27, 2018

துரோகத்தின் துரோகியர்.

சாக்கடை புழுக்களை
சாமியார் என்றும்,
சகதியில், விதி செய்யும்
விவசாயியை
தாழ்ந்தவர் என்றும்,
போக்கணம்
கெட்ட பேசுவோர்
பூமியில்
துரோகத்தின்
துரோகியர்!

வேர்க்கவும், உடல்
உக்கவும், வீதியில்
நின்று வெயில் குடித்து
தரை துடைக்கும்,
கூலியாளை,
குறை கூறி ஒதிக்கிடும் பாவியர், பயனற்ற
துரோகத்தின் துரோகியர்!

காகித தாழ்களில்,
நிறத் தரவுகள்
 இட்டதால் - அதை
அதிகமே பெற்றதால்,
கால் வயிற்று கஞ்சிக்கு,
நேர்மையில் நின்றிடும்
ஏழ்மையை மதித்திடா,
மமதைகள் யாவுமே - மதி
கெட்ட துரோகத்தின்
துரோகியர்!

ஆள்பவன் என்றும்,
அடைக்கலம் கேட்பவன்
என்றும், ஏளனம் செய்து,
தாழ்களை வீசி, தனக்குள்ளே அடக்கும்
யாவரும், துரோகத்தின்
துரோகியர்!

வெறுத்திடும் ஒன்றை,
மறுத்திடும் அதனுடன்,
இணைத்திடச் செய்யும்,
மாந்திரீகம், மந்திர வாத
துரோகத்தின்,
துரோகியர்!

பாசங்கள் கடந்து,
பணப் புதையலில்
புதைந்து, நேசங்கள்
தொலைத்து, காமத்தில்
குளிக்கும், யாவரும்.
மானிட வாழ்வியல்
துரோகத்தின்,
துரோகியர்!

நான், எனும்,
ஆங்காரத்தில்.
நாம் எனும், ஒற்றுமை
மறந்த கோவேறு
யாவுமே' மண்ணின்
மீது மா பெரும்
துரோகியர்!

நட்பிலே நுழைந்து,
கற்பிலே கறை பூச,
கற்பனை செய்தும்,
கட்சிதம் செய்தும்,
சமத்துவம் மறந்த யாவரும்,
பெண்மையின் துரோகத்தின்
துரோகியர்!

சொல்லலாம், இன்னும்
கோடி துரோகங்கள்.
சொல்லி மாறும் என்றால்.
மாறாது என்றறிந்தும்
மனம் பொறுக்காமல்
சொல்லிச் செல்கிறேன்
இத்தனை துரோகங்களை!

               

தமிழ் மறந்த தமிழர்கள்


சித்தனைக் கண்டேன்,
பித்தனைக் கண்டேன்,
தமிழ் புத்தகம் 
கொண்டே!

தமிழர் புத்தியில் 
நின்றும் செத்திடும்,
தமிழ் கண்டு அழுதேன்!



அம்மா, என்று 
உதடுகள் 
பிணைக்கையில்
அடி மனதில் பாசம்
கொண்டு ஆழும் 
தமிழ், இன்று மம்மி
என்று மகுடி ஊதுவது 
கண்டு, அழுதேன்!

வைரமுத்து வென்றெடுத்த
சிந்து தமிழ் எங்கே?

வாலியவர் கொஞ்சி 
நின்ற கொஞ்சு தமிழ்
எங்கே?

பாரதியின் 
பாட்டுத் தமிழ் எங்கே? 
இந்தப்
பாவியர் பூட்டி வைத்தார்
எங்கோ!



ஈழத்து தேங்காயும்,
சேலத்து மாங்காயும்,
ஏலத்திற்காய் காத்து
நிற்பதில்லை, 
தோழா.....
உங்கள் 
கோக்கனைட்,மங்கோ
போன்று......
என்றுமே நாங்கள் 
விற்றிடாத் தமிழ்,
வெற்றி முரசு, 
கொட்டிடும் தமிழ்!

வெள்ளையனை 
வீரம் கொண்டு
விரட்டிய தமிழா இன்று
உன் வெற்றிலைக்கு 
சுண்ணாம்பு ஆங்கிலமா?



சாதத்தில் 
சாம்பாறிட்டு
உண்ட நிலாச் சோறும்,
அதில் கண்ட 
அம்மாவின் அன்பும்,
டைனிங் டேபிளுக்கும்,
ஸ்பூனுக்கும், 
சிறையானதென்ன!

நான்' தமிழன் என்று
வீரம் கொண்டெழுந்த
வேங்கைகள் தந்த
வாரிசுகளே, 
ஆங்கிலேயர் 
அளவுக்கும், 
தமிழ் நுழைவதில்லையே
உங்கள் நாவுகளில்!



ஆந்தைக்கு ஒப்பான 
சாமான்யவான்களே'
ஆடிப் பெருக்கு வரும்
அலையில் கழுவுங்கள்,
உங்கள் நாவுகளை,
ஆங்கிலத்தின் 
துர் நாற்றம் 
அங்கலாய்க்கிறது 
உங்கள் நாவுகளில்!



எண் திசைகளும்
தமிழ் எனும் 
சுவை வேண்டும், 
எடுத்தியம்புங்கள் 
என் தாய் மொழியை
பாமரனும் பாடி மகிழ!

தமிழ் கொண்ட 
தாழாத வாசம்
தலை மகுடம் 
சூடுமா இனியாவது, 
விடுகை பெறுமா 
இதயங்கள் தமிழுக்காய்!

Monday, November 26, 2018

அவதி

காத்திருப்பில்
காதல் துலைகிறதா
என்று கேட்டன்!

கருவுறுகிறது
என்றது மனது
நிமிடங்களை
என்னால்
நிந்திக்கக் கூட
முடிவதில்லை!

காரணம்
அந்த நிமிடம் உனதாகி
 விடுமே என்று
சிந்திக்கிறேன்!

கானலில் காதல் செய்தேன்

கானலின் சாரலில்
சரிந்தவள் நான்,
காதலைத் - தீ
என என்னி
நீரினில் புதைந்தவள்
நான்!

ஏதென அறியாமல்
எதனிலும் ஒட்டாமல்
திரவமாய் மிதந்தவள்
நான் - இன்று
உன் குரல் கேளாமல்
உன் முகம் பாராமல்
உயிர் வாழ்வது
சிரமம் என
துடிப்பவள் நான்!

எங்கிருந்தாய்
இத்தனை நாட்கள்
ஏன் மறைந்தாய்
என் விழி நின்றும்!

பித்தனையே
மிஞ்சி விட்டேன்,
உன்னை மொத்தமாய்
வடிப்பதற்கு - நீ
கார்காலக் குளிர்
மேகம், அதனால் தான்
நான் உன்னில் மலர்கிறேன்!