Monday, December 3, 2018

யாரடா நீ......




காற்றில் மிதந்து
வந்த சருகைப் 
போல் 
எங்கிருந்து
வந்தாய்,

காரணம் இன்றி
தொடரும் 
உரையாடலை
என் மீது தொடுத்தாய்!

கணப் பொழுதிலா 
காலங்கள் தாண்டியா 
இந்த பந்தம்!

கனமற்ற வளியில்
சுமையற்ற பயணி
நான், இணைந்து
பயணிக்கப் போகிறாயா.....
இடை வெளியில்
காணாமல்
போகப் போகிறாயா!

இடர்ந்து நடக்கிறேன்
இனிய பொழுதுகளைத் 
தேடி.........

No comments:

Post a Comment