Saturday, December 1, 2018

எழுந்து வா



ஆரம்பங்கள் போல்,
 முடிவுகள்
 இருந்துவிட்டால்
 சுவரசியங்களை
 எங்கே பதுக்கி
 வைப்பது.......
 காற்றில் போராடும்
 மூங்கில் காற்றிடம்
 ஜெய்ப்பது போல்
வாழ்க்கையை
ஜெய்த்திடப் பழகு!

இழப்புகளை
 சிரித்த படி
வரவேற்கக்
 கற்றுக்கொள்ள!

அழுகைகளில்
அழுக்கை குழிப்பாட்டு!

விரக்தி வந்தால்
வெற்றியின் விளிம்பை
நெற்றிப் பொட்டில்
வைத்து விரக்தியைத்
துரத்து!

அவதூறுகளை
அம்பாக்கி
 இடையூறுகளின்
மேல் எய்து வீழ்த்து!

பசியாத வயிறும்,
வலியாத உடலும்,
அழாத விழியும்,
வீழாமல் ஒடும்
நீயும், இன்பத்தைக்
காணலாம்........
வாழ்க்கையின்
பெறுமதியைக்
காண முடியாது!

விழு, அழு,
வலிகளை வாங்கு,
புன்னகைக்கு மட்டும்
துரோகம் செய்யாது
இதழ் விரித்திடு......!

நீ புன்கைக்க மறந்தால்!

தோல்வி தலையில்
அமரும், ஏழனம்,
சிறையில் அமர்த்தும்!

உன்னை நீ மறப்பாய்,
உன்னையே தொலைப்பாய்,
உன்னையே உனக்குத்
தெரியாமல் கூடப்
போகலாம்,
பின்பு ஏதடா வாழ்க்கை......

சினத்தை சிரசில்
இருந்து வீசு,
பொறுமையை
உடல் முழுவதும்
பூசு, சோகத்தை
ஒதுக்கி ஓரமாக அமர
விடு , இதயத்தால் சிரிக்கப்
பழகு, முகத்தை
விறைக்க  விடாது
மலர விடு ,
மறு கனம் பாரடா
எதிரியும் உனக்கு
அஞ்சுவான்!

துவழ்து புதையாதே,
விழும் போதே எழுந்திட
சிந்தித்துக் கொள்
எழுந்து வா........
ஏற்றம் உண்டு
வாழ்வில்!
           

No comments:

Post a Comment