Sunday, April 28, 2019

குரோதம் காணும் குருதி

வனாந்தரம் அமைதி காண
வையகம் ஏனோ அழுகிறது
கொய்திட்ட தலைகளை
கோர்த்து வைத்து
எய்தவை பற்றிக் கேட்போமா.....!?
எதுவென்று அறியாமல்
முளுசுமே.....!

மழலைகள் கோரச் சத்தம்
மடுவிலும் மலையிலும் சிதறி
எழுகிறதே தீங்கினை வினவி ஒரு
விடை காண்போமா.......!?
உலகின் பொருள் அறியாது தவிக்குமே....!

வல்லவன் சொல்லாச் செயல்களை
வலிந்து செய்யும் நாசர்களை
வெறுத்து விலகிடலாம்!

வஞ்சனை அறியாது வாழ்ந்த
மக்கள் நெஞ்சினைத் துளைத்து
நோவினை கொடுத்து பஞ்சு போல்
பறந்தனரே அவர்கள் உடல்கள்!

என்னென்று ஆறும் துயர்
எங்கென்று தீர்ப்பது இழப்பினை
ஏங்கித் தவிக்குது மனம்!

வஞ்சகர் செயலால் வாயில்லாப்
பூச்சிகளும் விமர்சனச் சிறையில்
புள்ளியாய் மின்னுதே
அவர்கள் எள்ளளவும் என்னாதோர்
தீவிரவாதம் தனை!

செங்குருதி கொண்ட உடல்
சுவர்களில் அப்பிக் கொள்ள
ஈனர்கள் செயலால் எங்கள் உள்ளமும்
ஏசித் தீர்க்குதே!

நாளை நாங்களும் உயிர் இழந்த
தசைகளால் சுவர் ஒட்டி ஓவியம்
ஆகலாம் அந்த ஓவியங்களை
கழுகுகள் கூட சுவை காணலாம்!

மானிட வாழ்விலே மதங்கள் பழியில்லை அதை உணர்ந்தவர்
மனதில் பகையில்லை!

கொன்றவன் சென்றவன் கண்டதுதான்
என்னவோ......!?
இருப்பவரேனும் இதை எண்ணிப் பார்க்க மறுப்பதும் ஏனோ...!?

மதங்களும் திரு மறையதும்
வாழ்வுக்கு வழியடா அதை
சினங்களுக்குச் சின்னமாக்கியது
ஏனடா!?

பேசித் தீர்க்க தீரும் பகையை நீ
ஏனோ தாக்கித் தழைக்க விடுகிறாய்
ஆறாத துயரால் அறிவிப்பு இன்றி
அழுகிறது கண்கள்!

மானுடா மனிதம் காத்திட வா.


                                                      ஷியா

No comments:

Post a Comment