மற்றும் ஓர் நேசமும் இல்லை
இருப்பினும் ஏன் இந்த
காதல்!
பனிக்குடம் உடைத்து
பால் மடி சுரந்திட தொப்புளில்
வலித்திட நான் தொல்லைகள்
தந்ததும் இல்லை இருப்பினும்
ஏன் இந்த நேசம்!
உன் இடையில் என்னுடல்
சுமந்ததும் இல்லை
உன் தோள்களில் நான்
தாவிக் குதித்தொரு ராட்டிணம்
சுத்தவும் இல்லை இருப்பினும்
ஏன் இந்த ஆவல்!
நிலவினை உன்னுடன் ரசித்ததும்
இல்லை நிழல் என உன் விரல்
பிடித்ததும் இல்லை
இருப்பினும் ஏன் உன்னில்
எனக்கான துடிப்பு!
சிந்திக்கச் சிந்திக்க சிந்தை
மகிழுது பார் உன் அன்பில்
நனைந்தொரு நெஞ்சம்
அழுவதைப் பார்!
நேசங்கள் பாசங்கள் கருவறை
மட்டும் தருவதில்லை
நேர்மையும் நெஞ்சம் கொள்
தூய்மையும் ஆலம் முழுதும்
அள்ளித் தருமே தூய்மையே
நீ தூசில் அண்டாதிரு!
க.ஷியா.
No comments:
Post a Comment