இந்த இரவுப் பாயில்
தினமும் தூங்கும் எனக்கு
நிலவு முத்தம் தின்ன
வேண்டும் போல்
எண்ணி!
மணலிடம் முதுகை
கொடுத்து மல்லாந்து
கண்ணெறிந்தேன்!
அங்கே தென்னங்கீற்று
துண்டு போடுகிறது நிலவை!
கன்னங்கள் எல்லாம் கீறல்
அந்த நிலவில் முத்தம் தின்னும்
ஆசை நீங்கி தென்னங்கீற்றை
முறைத்த படி மனதுக்குள்
விம்மி எழுந்து நடந்தேன்!
இந்த இரவுப் பாயில் புழுக்கம்
வந்து அமர்ந்து கொண்டு
அதன் மேல் உறங்கச் சொல்கிறது!
இப்படித்தான் இந்த இரவுக்காறி
நிலவு முத்தம் தின்னவும் விடுவதில்லை
நிறைந்த தூக்கம் தருவதும் இல்லை!
விடியப் போகும் விடியலில்
இருதயத்தில் சூரியன் சுடும்
அப்போதும் இருக்கத்தான் போகிறோம்!
க. ஷியா
இலங்கை.
No comments:
Post a Comment