தீ எனத் தீக்கிறது வெயில்
என் பாதங்கள் தீந்தே
போகிறது!
வேர்வையின் நதியில்
என் தேகங்கள் நீந்த
போர்வைகளை எடுத்தெறிந்திட
போர் தொடுத்திடும் கரம்!
சுட்டன பட்ட இடமெல்லாம் சுட்டன
அதில் இதயமும் கொஞ்சம்
பட்டன!
சிற்றெறும்புகள் சிதறாமல்
அணிவகுக்குது என் கால்களோ
சிந்தத் துடிக்கிறது சீழ்களை!
வெயில் கீறத் துடிக்குது
உயிர் தாவத் துடிக்குது
கால நிலை கூட காய்ந்து கிடக்குது!
எங்குதான் நீந்த வியர்வை
நதியில் வெந்த உடல்கள்
எங்குதான் நீந்த.....!
காற்றும் காற்றாய் இல்லையே
கவிழ்தே கொட்டுகிறது தீப் பிளம்பை!
இயற்கைக்கு என்னவாயிற்று
அவைகளை அவைகளே சுவாசிக்கத்
துடிக்குது போல!
அந்தக் கோழி இறகு எனை
உணர்ந்ததா என்ன காற்றின் சிறகில்
ஏறி வந்து என் தோள்களில்
சரமாகுது!
தோரணை போடும் வியர்வைத் துளியே
என் தேகத்தில் பதுங்காதே!
முகம் தடவும் சுருள் முடியே
இளநரை விலகுது அவள்
கூந்தலை மூடு முகம் கொஞ்சம்
இளைப்பாறட்டும்!
தென்னங் கீற்றில் வந்துரசும்
காற்றே இந்தத் தரையைக் கொஞ்சம்
தலை கோதாயோ!
அவிழ்ந்து கிடக்கும் அக்கினி கொஞ்சம்
எழுந்து பறக்கட்டும் குளிர்ந்து
சுவாசிக்க!
க. ஷியா
No comments:
Post a Comment