சிக்கன வாழ்கையில்
சிரிக்க வைத்து சிதைக்கிறது!
அத்தனை குணங்களையும்
மறக்கடித்து சீரழிக்கிறது!
குரல் வளை அவித்து குடலினுள்
குவிந்து உடலினை துளைத்து
உருவிருக்க உனைத் தின்கிறதே
போதை!
எத்தனை கூக்குரல் எங்கெல்லாம்
விழித்திட விளம்பரங்கள்
கண் முன்னே மரணங்கள்!
கண்டு கொண்டே தொண்டு போல்
செய்கிறாயே!
தீண்டாதே உருவித்தின்கிறது உனை
மீண்டு வா மீட்டெடு காத்திருக்கிறது
புது யுகம்!
No comments:
Post a Comment