முத்தங்களைத் தொட்டு
வைத்த உன் இதழ்கள்
சத்தமின்றி உறங்குகிறது!
அதை வாங்கிக் கொண்ட
கன்னங்கள் மட்டும்
தாகத்தில் தவிக்கிறது!
பத்து விரல் இடுக்குகளும்
மொத்தமாக இறுகப் பின்னி
இழுத்தணைக்கிறாய்!
உன் செவ்விதழ்கள் கொண்டு
எனை மிச்சம் இன்றி தின்கிறாய்!
மார்பினை முட்டி உரசி
தோளினைத் தடவுகிறாய்
நான் வாடிடாக் கொடியென
ஸ்பரிசம் தடவிக் காட்டுகிறாய்!
என் அடி மடி தேடி
ஆவல் கொள்கிறாய் என் மேனியை
தினமும் கால்களால் பின்னுகிறாய்!
அப்பி வைத்த எச்சில்கள்
அழுக்காக்க அப்படியே நாவால்
எனைக் குழிப்பாட்டுகிறாய்!
ஊட்டுகிறாய்
என் கோடை நதியைக் கட்டி வைத்து
நீ உருவெடுத்தாய்!
மேலாடை நகர்ந்தால் வெட்கமல்லவா
நீ என் உயிர் உறை நுழைந்து
உருவெடுத்தாய் புனிதம் தான்!
தீராத மோகங்கள் இரண்டு
மோத பாராளும் காதலுக்கு
பாங்கான பரிசாக நீ வந்தாய்!
வேண்டாத மாதுக்குள் கூட
வெகுவாக குடி புகுவாய்
வேண்டும் என்று அழுதவற்கும்
தூரம் நின்று சோதிப்பாய்
உன் தித்திப்போ திகட்டாது போ!
க.ஷியா
இலங்கை
No comments:
Post a Comment