எடுத்து வைத்த கால்கல்
எல்லாம் எத்தி விட்ட காலம்
கண்டு நெற்றி விறைக்க
அழுததுண்டு!
தொட்டு வைத்த முயற்சி எல்லாம்
கெட்டு விட்ட தீனி போல
கொட்டி விட்டு புதைத்ததுண்டு!
ஏணி என்னும் தோழர்கள்
தேடி ஏமாற்றம் எனும்
சாலையில் நானும் என்னிலை
மறந்து நடந்ததுண்டு!
வழி அறிந்த குருடர் போலே
வலம் குறைந்த மனிதர்கள்
போலே சுயம் மறந்து அலைந்ததுண்டு!
இப்படியே இருந்து விட்டால்
எப்படித்தான் வாழ்வதென்ற
வினா எழவும் விதியது நேரம்
ஒதுக்கியது விழித்தெழுந்தேன்!
கடந்து வந்த பாதையெல்லாம்
முட்கள் கொய்தேன் அதன் முனை
உடைத்து பதம் செய்தேன்
அடுத்தவர் அறிவுறையை கொஞ்சம்
எடுத்து ஓரம் வைத்தேன்!
எனது புத்தியை உயிர்ப்பித்தேன்
காலம் தந்த வடுக்களை சேமித்தேன்
முனை உடைத்த முட்களுடன்
கலந்து பாதை ஒன்றைச் செப்பனிட்டேன்!
நடந்த போது சற்றே சறுக்கியதுதான்
விரைந்த போதும் கொஞ்சம்
குடைந்து ஒரு வலி கண்டதுதான்
மயங்கவில்லை
தயங்கவில்லை
எழுந்து நடக்கிறேன் எனது புதிய பாதையில் துணையாக எனது வெற்றிகள்!
நான் விழுந்த இடமெல்லாம்
விதைத்த முட்கள் இன்று எழுந்து
பூத்தூவுது!
க.ஷியா
இலங்கை.
No comments:
Post a Comment