வந்து விடு
வீங்கிருள் திரை தொடுக்க
கயல்களும் காத்திருக்க
கயவனே எனை களவாடி
மறைந்தாயே நெஞ்சின்
துடிப்பினை சடுகதியாக்கி
விட்டு!
குழலியில் கரு விழி மையம்
கொள்ள குமரி நான்
கதறியே உன்னை தேட
பதுமைபோல் எங்கு சென்று
அமர்ந்தாயோ
இங்கும் உனை காணேன்!
நாளிகை கூட நாவைத்
தடுக்கி ஓடுதே
நான் உனை நலம் கேட்டால்!
விடியலில் வந்து விடு
விளுங்கிய ஏக்கங்கள்
விடை பெறட்டும்!
க.ஷியா.
இலங்கை
No comments:
Post a Comment