Saturday, March 23, 2019
தேர்தல்
அடுத்தடுத்து வந்தாலும்
அடுக்கடுக்காய்
அழுக்கு விளைவுகளே
தொடுத்து வரும்!
எடுத்தெடுத்து
போட்டாலும் எதுவும்
எமக்கென்று
நினையாதே!
இலித்துச் சிரித்து
அழைத்தாலும் இருக்கும்
கசடு மனசோடு!
அடித்த மையும் கொடுத்த
வாக்கும் அடுத்து சில
நிமிடங்களே!
வீதிகள் விழாக்காணும்
இருள்களும் சமாதி
போகும் இலுக்கு கூரை
மினுங்கும் தகடாக!
இடுப்பு வேட்டி இரும்பு வாளி
அடிபம்பு குடத்துக் கோர்வை
பட்டாவும் பரிவாரமும் இன்னும்
சில காட்சிகளும்!
ஒலி பெருக்கி வாய் சத்தமாகும்
தெரு பெருக்கி சுத்தமாகும்!
மேடைக்கு மேதை கூட்டம்
ஓடைக்குள் மூடர் கூட்டம்
நாளைக்கும் விடிவு இல்லை!
வாக்குகள் வேண்டும் என்று
வாக்கினை ஓடையில்
எழுதி விடுவர் ஜெய்த்ததும்
கரைந்திடும் காலமும் மறைத்திடும்!
ஆசனம் அமரும் முன்னே
பாறையில் ஆறு ஓடும்
குருதியில் குளியல்
காணும்!
பொது மகன் உடமையில்
தீப்பிடிக்கும் பொழுதுகள்
புகைகளில் ஒழிக்கப்படும்!
பதவிக்காய் சத்தியம்
சாகடிக்கப்படும்
பார்வையில் தேன் ஊறும்!
யாரோ ஒருவனாய்
இருப்பான்
ஊரில் உள்ள உன்னை
எல்லாம்
தத்தெடுப்பான்!
ஊற்றி வைத்த தாரை
எல்லாம் வாக்கெடுப்பு
முடியும் முன்னே
வண்டி ஓடி தேய்த்து
வைப்பான்!
ஆளுக்கொரு அமைச்சு
வரும் ஆயிரம் தலைமை
தோன்றும் ஆனாலும் ஆபத்தில்
பல தெய்வ வழிபாடு போல்
பரிதவித்து மக்கள் நிற்பர்!
ஏனடா மானிடா......
யாரடா உண்மையாளன்
அப்படியும் ஒருவன் வந்தால்
அவன் நெற்றியையோ
நெஞ்சினையோ தோட்டாக்கள்
துளைக்கும்!
என்னதான் வழி .......!!!!!
இப்படியே வழி இன்றி
வரி கொடுத்தே வறுகி
விட்டால் மறு தலை முறை
மண்டியிடும்!
மறுபடியும் தேர்தல் வரும்
தகட்டுக் கூரை ஓடாய் மாறும்
பாறையில் நதி ஓடும்
குருதியில் குழியில் காணும்
மீண்டும் ஓர் சமூகம் நினைவு
கூறும்!
ஷியா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment