பிறந்தோம் இறந்தோம்
என்பதற்கு நடுவில்
எத்தனை சூழ்ச்சுமங்கள்!
அத்தனையும் அலற
வைத்தும், நகர முடியாது
போன சிறையே, உலக வாழ்க்கை!
இதை உணராத உள்ளங்களில்
எத்தனை கரடு முரடான
சிந்தனைகள்!
நித்தமும், நித்தமும், இரத்தமே
கொப்பளித்து, உதிரத் துளி விழும்
இடத்திலே முகம் புதைக்க
எத்தனை, எத்தனை ஆவல்கள்!
மனிதம் தாண்டி எது உண்டு'
எதை அடைய இத்தனை
பிளவுகள், நாளை நீயோ....
நானோ.... உயிர் பிரிந்தால்
ஒரு சில நிமிடங்கள் மட்டுமே
உலகை வசித்திருப்போம்
பிணம் என்னும் பெயர் கொண்டு!
இத்தனையும் நிஜம் என்று
புரிந்தும் மாய மேடையில்
பேடை நாடகமும், நீளும் குரோதமும்
எதற்காக!
கோடிகளைக் குவிப்பதும், ஏழைகள்
தவிப்பதுமான விரு விரு போட்டியில்
வீதி நாய்கள் குரைப்பதும்
விரோதங்கள் சிரிப்பதும், பாவங்கள் அழுவதும், மொட்டுகள் சிதைவதும்
சொத்தெல்லாம் அழிவதுமாய்
பல வகை அரங்கேற்றம்!
யார் என்று பார்த்தால் எல்லாம்
உண்மைக்குப் புறமின்றி இரண்டே
ஜாதிதான், அந்த இரண்டு ஜாதிக்கோ
ஆஹ.... எத்தனை நீதி
எத்தனை சாதி, நீங்கள் வகுத்தது உங்களுக்கான சாதி அல்ல சதி
உணர மறுத்த உங்களால் முடிகிறது
உங்கள் விதி!
Tuesday, January 29, 2019
Sunday, January 27, 2019
இழிந்தவர் யாருண்டு
ரத்தத்தின் ரத்தங்கள்
உயிர் சப்தத்தின்
கூச்சல்கள் உயர்ந்தே
ஒலிக்கட்டும்..... ஒலிக்கட்டும்......
தீ என்ன, நீர் என்ன
தீராத தாகங்கள்
வீர் கொண்ட
வேகத்தில் பாயாதோ
ஆவல்கள்......
ஆட்சியில் பூச்சியங்கள்
ஆழ்கையில்
ஆழி எழுந்தது தவறா
ஆணை எழுப்பிடு தோழா.....
யாழில் அறுந்திடும்
நூலை எடுத்தொரு
காவியம் படைத்திடு தோழா.....
யானைப் பலம்
கொண்டு யாதும்
நமக்கென்று வீறு நடை
பயின்றிடு தோழா.....
(சேர சோழன் அழிந்ததால்
வீரம் குன்றிடல் முறையா
வீன் பேதம் வகுத்திடல்
ஆழகா.......)
தேக விசை எழ தீயில்
துயில் கழைந்திடு
தோழா......
சாது மிரண்டிட
சாவும் ஒழிந்திட
சடையில் அடி
தோழா......
சாதி விரண்டிட
சப்தம் அடங்கிட
ஏறி வதம்
செய்திடு எம் தவைவா....
பூமி அதிர்ந்திட
பூவும் கசங்கிட
உறங்குதல் முறையா
சொல் வீரா....
(புத்தரின் சிலையில்
பொத்தல்கள் விழுந்தால்
சோனகன் மேல்
பழியா ......)
எங்கள் முஹம்மதின்
நல் வழிகளை - நீ
தீயிலே பொசுக்குதல்
முறையா.....
நச்சுக்காற்றை பரப்பி
குற்றச் சாட்டை எழுப்பி
குலம் அழிப்பது உந்தன்
உந்தன் சதியே....
புத்தன் காந்தி போலே
எங்கள் உத்தம அஷ்ரப்
வாழ்ந்தான்....
பொத்திப் பொத்தி
எம்மை எதிரிகள் நின்று
காத்தான்.....
இன்று இல்லையே
உங்கள் வாய்களை
சொல்லால் அடக்கிட
அவர் இல்லையே இல்லையே....
ஏய்... தோழா நம் தோழ்களில்,
தோழ்களில் பூமி பந்தை
தோரணமாக்கிட
வா தோழா......
எதிர் காலத்தை, காலத்தை
சாதகமாக்கிட
வா.... தோழா....
எம்மை அழித்திட
ரத்தம் குடித்திட
துள்ளுதல், துள்ளுதல்
ஏனோ தெரியவில்லையே...
இந்த மண் மேலே
நாம் பிறந்தேமே
சரி சமமாக நாம்
வாழ்வோமே.....
வாழ்வோமே....
உங்கள் தீ செயல்
எங்கள் தேகத்தை, தேகத்தை
மட்டுமே அழித்திட முடியும்
அகிம்சையை அழித்திட முடியாதே....
வா... தோழா....
நம் வாழ்க்கையை,
வாழ்க்கையை
ஒரு நந்தவனமாக்கி
நாம் விரைவோம்...
சாதி குப்பை, துசு தட்டி
சமரம் செய்வோமே....
வா..... தோழா....
உயிர் சப்தத்தின்
கூச்சல்கள் உயர்ந்தே
ஒலிக்கட்டும்..... ஒலிக்கட்டும்......
தீ என்ன, நீர் என்ன
தீராத தாகங்கள்
வீர் கொண்ட
வேகத்தில் பாயாதோ
ஆவல்கள்......
ஆட்சியில் பூச்சியங்கள்
ஆழ்கையில்
ஆழி எழுந்தது தவறா
ஆணை எழுப்பிடு தோழா.....
யாழில் அறுந்திடும்
நூலை எடுத்தொரு
காவியம் படைத்திடு தோழா.....
யானைப் பலம்
கொண்டு யாதும்
நமக்கென்று வீறு நடை
பயின்றிடு தோழா.....
(சேர சோழன் அழிந்ததால்
வீரம் குன்றிடல் முறையா
வீன் பேதம் வகுத்திடல்
ஆழகா.......)
தேக விசை எழ தீயில்
துயில் கழைந்திடு
தோழா......
சாது மிரண்டிட
சாவும் ஒழிந்திட
சடையில் அடி
தோழா......
சாதி விரண்டிட
சப்தம் அடங்கிட
ஏறி வதம்
செய்திடு எம் தவைவா....
பூமி அதிர்ந்திட
பூவும் கசங்கிட
உறங்குதல் முறையா
சொல் வீரா....
(புத்தரின் சிலையில்
பொத்தல்கள் விழுந்தால்
சோனகன் மேல்
பழியா ......)
எங்கள் முஹம்மதின்
நல் வழிகளை - நீ
தீயிலே பொசுக்குதல்
முறையா.....
நச்சுக்காற்றை பரப்பி
குற்றச் சாட்டை எழுப்பி
குலம் அழிப்பது உந்தன்
உந்தன் சதியே....
புத்தன் காந்தி போலே
எங்கள் உத்தம அஷ்ரப்
வாழ்ந்தான்....
பொத்திப் பொத்தி
எம்மை எதிரிகள் நின்று
காத்தான்.....
இன்று இல்லையே
உங்கள் வாய்களை
சொல்லால் அடக்கிட
அவர் இல்லையே இல்லையே....
ஏய்... தோழா நம் தோழ்களில்,
தோழ்களில் பூமி பந்தை
தோரணமாக்கிட
வா தோழா......
எதிர் காலத்தை, காலத்தை
சாதகமாக்கிட
வா.... தோழா....
எம்மை அழித்திட
ரத்தம் குடித்திட
துள்ளுதல், துள்ளுதல்
ஏனோ தெரியவில்லையே...
இந்த மண் மேலே
நாம் பிறந்தேமே
சரி சமமாக நாம்
வாழ்வோமே.....
வாழ்வோமே....
உங்கள் தீ செயல்
எங்கள் தேகத்தை, தேகத்தை
மட்டுமே அழித்திட முடியும்
அகிம்சையை அழித்திட முடியாதே....
வா... தோழா....
நம் வாழ்க்கையை,
வாழ்க்கையை
ஒரு நந்தவனமாக்கி
நாம் விரைவோம்...
சாதி குப்பை, துசு தட்டி
சமரம் செய்வோமே....
வா..... தோழா....
Thursday, January 17, 2019
அழகியின் வெட்கம்
பொழுதுகள்
மந்தம் கொண்டது
மழை மேகத்தின்
வருகையால்!
உன் இதழ்களோ
தேனைப் பொழிந்தது
நீ வெட்கம் கொண்டு
சிவந்ததால்!
கவிஞனை அழைத்து
கவி புனையும்
வெட்கச் சோலையே
எனை உன் வெட்கங்கள்
களவாடியதை
அறிவாயோ!
அடடா.....
இதழ் விரித்த
வெட்கத்தால்
உன் கன்னங்களோ
குழலுக்குள் ஒளிந்து
கொள்ள இடம்
தேடுதே....
இவன் விழி காயுதே!
மந்தம் கொண்டது
மழை மேகத்தின்
வருகையால்!
உன் இதழ்களோ
தேனைப் பொழிந்தது
நீ வெட்கம் கொண்டு
சிவந்ததால்!
கவிஞனை அழைத்து
கவி புனையும்
வெட்கச் சோலையே
எனை உன் வெட்கங்கள்
களவாடியதை
அறிவாயோ!
அடடா.....
இதழ் விரித்த
வெட்கத்தால்
உன் கன்னங்களோ
குழலுக்குள் ஒளிந்து
கொள்ள இடம்
தேடுதே....
இவன் விழி காயுதே!
Wednesday, January 16, 2019
காலச்சக்கரம்
அவன் தந்து போன
நினைவுகளில்
நொந்து போன
இதயம் தான்
என் இதயம்!
அவன் வென்று போனது
என்னைத்தான் என்
அன்பையல்ல....
உயிர்
கொன்று போனவன்
கொண்டு போன
புன்னகைகள் பூக்க
மறுத்தனவே...
ஏக்கம் திணித்தனவே!
ஏளனப் பொழுதுகள் குவிய
என்னென்றும் கேளாது
ஓடும் நிமிடங்கள் கூட
என்னைத் தடவிப்
போனனவே...!
ஆற்றருகே அமர்ந்திருந்து
ஊட்டி விட்ட நினைவுகள்
எல்லாம் ஊசலாடுகின்றனவே!
கோர்த்து வைத்த கனவுகளை
சேற்றில் புதைத்திருந்தாலும்
கோரையாகவேனும்
படர்ந்திருக்கும்...
தீயில் இட்டு திணறவைத்தவன்
நீயே - தீ!
வார்த்தைகளில் வாழ்வளித்த
உன் உதடுகள் அதே
வார்தை கொண்டு வதம்
செய்தனவே - எனை
ரணம் செய்தனவே!
எதுவாயினும்,என்னை
விட்டுப் பிரியாதே
என்று நீ கூறிய
வாசகம் இன்னும்
அறைகூவலாகவே
ஒலிக்கிறது விதியிடம்
நான் தோற்ற பின்னும்!
எனை பிரிவதற்கு
உன் நட்பை
ஆயுதமாக்கினாய்
அவைகளுக்கும் இரக்கம்
செத்துப் போனனவே
இதழாகளாலே அவைகளும்
ஈட்டி எய்தனவே!
உன் உறவுகள்
உன் மீதான அக்றையை
என்மீது விசமாய்த் தொழித்தன
விழுந்து எழுந்தவள்
என்பதால் விழும்போது
வலிக்கவில்லை....!
உன்மேலான
நினைவாற்றல்
ஒன்றுக்கு ஒன்று
இலவசம் என்று
எண்ணியதோ தெரியவில்லை
என் இதயம்!
எனை நங்கூரமிட்டு
கட்டிவைத்தது எங்கும்
அசையாது.....
நான் மீண்டிராத போதும்
மீண்டும் எழுந்தேன்!
காலம் உன் நினைவுகளை
என்னில் மாற்றியது
சில வருடங்கள் கடந்தனதான்
இருப்பினும் காற்று வந்து
போவதுபோல் உன்
நினைவுகள் வராது இருப்பதில்லை!
ஆனால் எதுவும் எனை
பாதிக்கவில்லை
மீண்டும் உன் கண்களைக்
காணும் வரை.....!
கண்ட போதும்
நான் விழவில்லை
ஆனால் ஏனோ வலிக்கிறது!
எழத் தெரியாதவளாய்
சிதைந்து கிடந்தேன்
அந்த சில நிமிடங்கள்
ஏனோ உன் நண்பனின்
நட்பையும் துண்டிக்க
மனம் மண்டியிட்டது
அதுவும் எனை வென்று
விட்டது!
இல்லறம் இணைந்தாய்
என்று காதுகள்
கீறல் கொண்டது
என்னிடத்தில் அவளைக்
கண்ட போது இதயம் தான்
கொஞ்சம் வலித்தது!
நினைவுக்கு வந்தது
உன் வார்த்தைகள் என்பதால்!
நீ ..... நீயாக இருக்கிறாய்
நான் எதுவாக என்று
அறியாத போதும்!
ஷியா.
Friday, January 11, 2019
மனசு
எத்தனை மாற்றங்கள்
என்னை மாற்றிப்
போனாலும்
உடலால் மாறுகிறேன்
உன் உணர்வால்
மாறவில்லை!
எத்தனை வசந்தங்கள்
என்னை வந்து
தழுவினாலும்
அத்தனையும்
என் வாசலோடு
போகிறது
மஞ்ஞனைகள்
வருவதில்லை!
எத்தனை புன்னகைகள்
என் உதட்டில் பூத்தாலும்
அதனையும் உதிர்ந்தே
போகிறது
உனக்கான
நிஜப்புன்கைக்கு
இடைவெளி
விட்ட படி!
எத்தனை காதல்கள்
என் உள்ளம் எனும்
ஆழ்கடலில்
மிதப்பாய் வந்து
உரசினாலும்
உன் ஒற்றைக்
காதலுக்காய்
நான் தட்டத்தனி
தீவில் - இவன்
தேகம் எனும் தேசத்தில்
மனசே மனம் சேரவா!
✍
ஷியா.
காதல் ரீங்காரம்
நூற்றாண்டின்
நொடிகள் வேண்டும்
நொடிகள் தோறும்
நீ வேண்டும்!
உன்னோடு கூடும்
முன்பு - நான்
தனிமையில்
கழித்த அந்த இழமைக்கும்
சேர்த்து இன்னொர்
ஜென்மம் வேண்டும்!
எந்தன் இழமையை
களவு கொண்ட
நரைகளும் கூட
நம் காதல் ரீங்காரம்
இசைக்க வேண்டும்!
உணவுப் பந்தியில்
குவித்து வைத்த
எண்ணக்கொள்ளாத
சோறுபோல்
பிரியாது பிணைந்திருக்க
வேண்டும்!
கவிப் பந்தியில்
களைந்தால் கூட
களையாத பொருள்
போல் கலந்திருக்க
வேண்டும்!
தனிமையில் கூட
நாம் மட்டும்
தனித்திருக்க வேண்டும்!
இனிமையில் என்றும்
எம் வாழ்வே எண்ணற்ற
இனிமை தரவேண்டும்!
ரேகைகள் கூட
தேயாத தேகம்
கொள்ள வேண்டும்
நம் தீராத காதல்
போல!
✍
ஷியா
Thursday, January 10, 2019
சாது
மனங்களை
வருடிய
வசந்தம்
இலையுதிர்த்து
வரண்டு நின்று
தன்னையே
வருத்திக் கொள்வது
போல் பெண்மையும்
விட்டுக் கொடுப்பின்
விளிம்பில்
தியாகத்தின்
சின்னமாய்
விழிகளால்
விருந்தளிக்கிறாள்
விடை பெறும்
கண்ணீரை!
Sunday, January 6, 2019
இறந்த இதயம்
ஓராயிரம் கனவுகளுடன்
உலவுகின்றன
தென்றலைப் போல்
உலவி வந்தள்!
பாரம் அறியா வயதினிலே
வாழ்க்கைச் சக்கரத்தின்
இரண்டாம் பாகம்
எனும் புது உறவை
தலையில் சூடிக் கொண்டவள்!
துணை என்னும் வேலிக்குள்
துரு துருத்துச் சுற்றியவள்
கருணைக் கடலின்
ஆழமாய் நின்றவள்!
மனிதனை அன்றி
பட்சிகளுக்கும்
பசித்திடக் கூடாதென்று
ஓர சாரமெல்லாம்
தீனி போடும் பெண்ணவள்!
அழகுக்கு வெட்கம்
வரும் அவள் அழகு கண்டு
அத்தனையும்,அவள் செயலும்
அழகெனக் கொண்டவள்!
இவள் இன்பம் கண்டு
இயற்கை எரிச்சல் கொண்டதோ
என்னவோ சுழற்றிய
சூறாவளியை நிறைத்து
வைத்தது இவள் வாழ்க்கை
தோப்புக்குள்!
சுழற்றிய திசை எல்லாம்
பிய்த்து வீச பஞ்சமும், வெஞ்சமும்
நெஞ்சே நிறைய
வஞ்சியின் வாழ்வோ
பிஞ்சன பஞ்சுகள் போல்!
தஞ்சம் புகுவிடமெல்லாம்
வெஞ்சமே மீதமாக
வஞ்சி அவளோ வையக
வீதியில் வடுக்களை
வாங்கியே கனத்திட்ட
ஜடமாக இதயம்
துடிக்க அவளோ இறந்து
கிடக்கின்றாள்!
உலகமே அவளை மறந்து
சிரிக்கிறது!
இதயம் இறந்தும் துடிக்கிறது!
✍
ஷியா.
...........
Subscribe to:
Posts (Atom)