Tuesday, October 29, 2019
புறவழியால் நுழைகிறார்கள்
என் அழகான அடுக்கல்களை
யாரோ கலைத்துப் போட்டிருக்க
வேண்டும்........
நான் வரிசைப் படுத்திய
வாசகங்களில் யாரோ
எதையெதையோ கலந்திருக்
வேண்டும்......
என் அடுக்கல்களின் இருப்பிடம்
தனித்துவத்தை இழக்கிறது
அங்கு பொருள் பட்டும் படாமல்
ஏதேதோ குவிகிறது......
நான் ஒதுக்கி விலக்கிப்
பார்க்கிறேன் யாரோ நான் இல்லாத
நேரங்களில் அனுமதியின்றி
புறவழியாக நுழைகிறார்கள்
போலும்.......
என் வரிசைகளின் வரைவிலக்கணம்
சில பிதற்றல்களால் நிரப்பப்படுகிறது
உங்கள் இடங்களில் வரைந்து
கிழித்துப் போடுங்கள்
என் அமைவிடத்தின் அமைதியைப்
பறிக்காதீர்கள்.......
இது நிம்மதியைத் தேடி எழும்
கோட்டை..........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment